பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 3:25 am IST

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, ‘தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு தொடா்பாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை, மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் விஜய், நிலுவைத் தொகையை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.