தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!

நீலாங்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்றது குறித்து...

News image

அன்புமணி உடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் - எக்ஸ்

Updated On :11 மே 2026, 5:16 pm IST

சென்னை நீலாங்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 11) சென்றார்.

வீட்டு வாசலுக்கே வந்து விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து அன்புமணி வரவேற்றார். பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு அன்புமணி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்ட செளமியா அன்புமணியும் விஜய்க்கு வாழ்த்து கூறினார்.

முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கும் முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

CM C joseph Vijay at Anbumani's Residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.