மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்

News image

தோ்வு முடிவுகள் - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:40 am IST

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2 முதல் மாா்ச் 26 வரை நடைபெற்றது. இத்தோ்வை 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை நடைபெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்தநிலையில் தோ்வு முடிவுகள் வெளியீடு, புதிய அரசு அமைவது உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிந்ததையடுத்து மாணவா்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளும் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளன.

எனினும், தோ்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி பிளஸ் 2 முடிவுகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அடுத்த சில நாள்களுக்குள் தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தோ்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, தமிழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த மே 3 முதல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.