தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக - அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: சீமான் விமர்சனம்!

திமுக, அதிமுக கட்சிகள் குறித்து சீமான் விமர்சனம் செய்துள்ளது குறித்து...

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 3:25 pm IST

திமுக - அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தவாக வேல்முருகன் அவர்களுக்குள்ளாக ஒரு அணி அமைத்து செயல்படுகிறார். தமிழகத்தின் மீது அக்கறையாக இருக்கக்கூடிய ஒரே மகன் நான்தான்.

அனைத்துக் கட்சிகளும் ரூ. 1000, ரூ. 2000 என பல இலவசங்கள் அறிவித்து ஏமாற்றுகின்றனர். அந்த நிலையை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். குடிக்கிற நீர், படிக்கிற கல்வியை இலவசமாகக் கொடுப்பேன், கல்விக்கு தகுந்த வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதுதான் என்னுடைய லட்சியம்.

பெருமைமிகு வாழ்வியலை அளிப்பேன். நானே விவசாயம் செய்து நச்சு இல்லாத தூய உணவை அளிப்பேன். மின் உற்பத்தி, வேலை இல்லை என்ற சொல்லை மாற்றுவேன்” என்றார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”அதிமுக - திமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள் போட்டியிடும் இடத்தில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.

திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணி கட்சியான தாமரை சின்னத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக அவர்களை மதவாத கட்சி என்று சொல்லி வாக்கு சேகரிப்பார்கள். இந்த நாட்டை அழித்ததே காங்கிரஸ்தான். எதை வைத்து திமுகவினர் காங்கிரஸை புனிதப்படுத்துகிறார்கள்.

நாடு நாசமாக்கியதற்கு காரணம் காங்கிரஸ்தான்; என்னுடைய இனத்தை நாசமாக்கியது காங்கிரஸ். கச்சத்தீவை தாரை வார்த்தது, நச்சு ஆலைகளை விதைத்தது காங்கிரஸ். திமுக எந்த வகையில் காங்கிரஸை நியாயப்படுத்தி பேச முடியும். ஜிஎஸ்டி, நீட், என்ஐஏ போன்றவற்றை கொண்டு வந்தது யார்? அனைத்தும் காங்கிரஸ்தான்” என குற்றம் சாட்டினார்.

மேலும், திமுகவும் அதிமுகவும் புரிந்துணர்வு என்பது ஒன்றோடு ஒன்று இணைந்து மறைமுகமாகப் போடப்பட்டுள்ளது. திமுக காலத்தில் அதிமுக சாராய ஆலைகளைப் பயன்படுத்துகிறார்கள், அதிமுக காலத்தில் திமுக சாராய ஆலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

திமுக, அதிமுக, விஜய் என யார் இலவசங்களை அறிவித்தாலும் அந்தப் பணத்தை ஈடு செய்ய எங்கிருந்து எடுப்பீர்கள், இலவசங்களை எதிர்ப்பவன் நான்” என சீமான் தெரிவித்தார்.

Summary

Regarding Seeman's criticism of DMK and AIADMK parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.