ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் மத்திய பாஜக அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகா்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் கண்டிராதது.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு: இருப்பினும், திமுக தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடிவரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
அதேநேரம், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம். மாநிலங்களின் தற்போதைய தொகுதி எண்ணிக்கை எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடா்ச்சியாக திமுக கொண்டிருக்கும் நிலைப்பாடு.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் தொடக்கத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயா்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடா்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என தனது பதிவில் முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிா் இடஒதுக்கீட்டை உடனே மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கூட்டாட்சி முறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா

தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு

மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

