விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் சாதனை குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவு..

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 11:53 am IST

ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 29% உயர்ந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 7997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது" என்று கூறியுள்ளது.

தொடர்ந்து இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி!

குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்!

2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%!

இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Tamilnadu is first place in textile export: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.