தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

மு.க. ஸ்டாலின் / வைகோ - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:59 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று (மார்ச் 11) கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் வருகைப் புரிந்து ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:

''வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் பாதுகாப்புக்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். 3 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு கட்சிகள் கூட்டணிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் குறைவாகப் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Tn Assembly Election 4 seats for MDMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.