லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :26 ஜூன் 2026, 4:39 pm IST

நாளை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

இதன்படி சென்னை எழும்பரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் நாளை(ஜூன் 27) தாழையூத்து வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த ரயிலானது ஜூன் 28ஆம் தேதி தாழையூத்து நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக திருநெல்வேலி மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே அறிவிக்கப்பட்டிருந்த பகுதி ரத்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கான்பூர் சென்ட்ரல் மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கோடைக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Summary

Southern Railway has made changes to tomorrow's Nellai Express train service.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.