மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை எவ்வித மாற்றமும் திருத்தமும் இன்றி ஆளுநர் ஆர்லேகர் வாசித்து வருகிறார்.
நிதி பங்கீட்டில் தமிழ்நாடுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக இடம்பெற்ற வரிகளை எவ்வித மாற்றமும் இன்றி வாசித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஆளுநர் வாசித்து வருகிறார்.
அதேபோல், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடனானது இரு மடங்கு அதிகரித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இருக்கும் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் பெயர், திராவிடம் என்ற வார்த்தை, மத்திய அரசுக்கு எதிரான வரிகளை வாசிக்காமல் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Central Government partiality - Governor reads out the government address without change
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! விஜய் அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
அண்ணா வரிகளுடன் தொடக்கம்! குறளுடன் நிறைவு! 36 நிமிட ஆளுநர் உரை!
இருமொழிக் கொள்கையே தொடரும்! கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்! ஆளுநர் உரை
ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக்காட்டிய ஆளுநர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை
