நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் தொடர்பாக...

News image

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 10:10 am IST

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்துள்ளது.

இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதனை பறிமுதல் சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தது மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள்கள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவித்தனர்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ரசாயன பவுடர் என்ற பெயரில் மலேசியாவுக்கு போதைப் பொருளை கடந்த முயன்றது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விமான நிலையத்துக்கு எங்கிருந்து வந்தது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி காட்சி உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உற்பத்திக்கு சூடோ எபிட்ரின் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding the seizure of narcotics worth ₹5 crore found unclaimed at Chennai Airport...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.