தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை நடிகை சமந்தா புதன்கிழமை (ஜூன் 17) நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சமந்தா தனத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று, நான் சென்னையில் தரையிறங்கியபோது, முதல்வரை சந்திக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியான உணர்வு என்னுள் ஏற்பட்டது. அவர் திரையில் மட்டும் கதாநாயகனாக இருப்பதற்காகப் பிறந்தவர் அல்ல என்று நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். அவருடைய ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவருக்கு அளிக்கும் வரவேற்பு ஆகியவை இதை விடப் பெரிய ஒரு விஷயத்துக்காக பிறந்தவர் என்று எனக்கு தோன்றும்.
ஏற்கெனவே, நாம் வெற்றி பெற்று முத்திரை பதித்த துறையை விட்டுவிட்டு, அதைவிட சவாலான புதியதொரு களத்தில் இறங்குவது சாதாரண காரியமல்ல. அவர் செய்வதற்குக் காரணம் அது எளிமையானது என்பதற்காக அல்ல; மாறாக அவரால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையால்தான்.
அனைவருடைய வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் தற்போது செய்வதைவிட மேலும் அதிகமாக ஏதேனும் செய்ய வேண்டும் எண்ணம் தோன்றும். மிகச் சிலரே அந்த எண்ணத்துக்கு செவிசாய்க்கின்றனர். முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவர் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது. இதை அவர் வகிக்கும் பதிவியால் அல்லாமல், மாறாக அவருடைய அணுகுமுறையால் செய்வார்.
அவருக்கு வலிமையும், ஞானமும், தைரியமும் கிடைக்கவும் அவரது பாதையில் உறுதியாக இருக்கவும் வாழ்த்துகிறேன். மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், நீங்கள் தொடங்கிய கனவை விட வாழ்க்கை மிகவும் பெரியது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும் என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் - சமந்தா இணைந்து கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Actress Samantha met Tamil Nadu Chief Minister C. Joseph Vijay in person on Wednesday (June 17).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அளவிட முடியாத மகிழ்ச்சி... கவனம் பெறும் சமந்தாவின் பதிவு!

முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரப்போகிறது: முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


