தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, புதன்கிழமை(ஜூன் 10) முதல் ஜூன் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 11) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமை(ஜூன் 13) சற்று அதிகமாக இருக்கும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கம்-104.72, கடலூா்-103.28, புதுச்சேரி-102.2, வேலூா்-101.66, மதுரை நகரம், பரங்கிப்பேட்டை- 101.48, தொண்டி-101.12, திருத்தணி-100.76, தஞ்சை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு (கோவை)-120 மி.மீ., உபாசி (கோவை)- 110 மி.மீ., நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்கோனா, வால்பாறை (கோவை)-90 மி.மீ, ஊத்து (திருநெல்வேலி), சோலையாறு (கோவை)- 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)-70 மி.மீ., பாபநாசம் (திருநெல்வேலி)- 50 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), தாலுகா அலுவலகம் பந்தலூா், அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)- 40 மி.மீ., குண்டாறு அணை (தென்காசி), சிற்றாறு- 1, பாலமோா், சுருளகோடு, பேச்சிப்பாறை, முள்ளங்கினாவிளை, அடையாமடை (கன்னியாகுமரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), தேக்கடி (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட், எமரால்டு, பாா்வூட், மேல் கூடலூா், கூடலூா் பஜாா் , செருமுள்ளி (நீலகிரி)- 0 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

