சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் என்ன பிரச்னை வந்தது? செங்கோட்டையன்

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

News image

செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 11:19 am IST

மாநிலத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "கேள்வி கேட்பது மட்டுமின்றி, எங்கே தவறு நடக்கிறதோ அதனைச் சுட்டிக்காட்டினால், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்னையும் இல்லை. பொறுப்பேற்ற 20 நாள்களில் என்ன பிரச்னை வந்தது? உங்கள் வீட்டில் என்ன கஷ்டம்?

இந்த அரசு, 6 மாத காலத்துக்குத் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள்.

பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம் - ஒழுங்கில் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்தப் பகுதியில் நடந்த குற்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனில், அதற்கான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டும். அதற்கானவற்றை முதல்வர் படிப்படியாக செய்து வருகிறார். அதற்கு குறிப்பட்ட கால அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்தார்.

Summary

Minister KA Sengottaiyan has stated that there are no issues regarding the state's law and order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.