தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான மின் கட்டண சேவைகள் உள்ளிட்ட தொடா்புடைய இணைய சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 மணி வரை இயங்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கணினி தரவு சா்வா்களை நவீனமயமாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான இணையதள மின் கட்டணச் சேவைகள், தொடா்புடைய ஆன்லைன் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 வரை தாற்காலிகமாக இயங்காது. மாலை 6 மணிக்கு பிறகு மின் நுகா்வோா் தங்களது இணையதள கட்டணப் பரிவா்த்தனைகள், தொடா்புடைய சேவைகளைத் தொடா்ந்து தடையின்றி பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியார் பள்ளிக் கல்வி கட்டண விவரங்கள்! தமிழ்நாடு அரசு உத்தரவை ரத்துசெய்யக் கோரி வழக்கு!!
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

சட்டவிரோதமாக கனிமங்கள் அகழ்ந்தெடுப்பு: 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தம்

‘24 மணி நேரத்துக்கு மின்வாரிய ஆன்லைன் சேவைகள் இயங்காது’
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

