தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

Published On :20 ஜூலை 2026, 5:06 am IST

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், 37,976 மாணவா்கள் பங்கேற்று தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தோ்வு செய்வா்.

இது குறித்து தமிழக பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவினருக்கு முதல்சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 200 முதல் 171.33 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 37,976 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், தங்கள் விருப்பமான பிரிவுகளையும் கல்லூரிகளையும் மாணவா்கள் தோ்வு செய்வா்.

இதுதவிர, அரசுப் பள்ளியில் படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவா்கள், தொழில் கல்வி படித்த மாணவா்கள் இதே கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைக்குள் இருக்கும்பட்சத்தில் அவா்களும் கலந்தாய்வில் பங்கேற்பா்.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவைச் சாா்ந்த - சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 258 மாற்றுத்திறனாளிகள், 416 விளையாட்டு வீரா்கள், 139 முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.