
தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சி அல்ல, அதிகார வர்க்கத்தின் ஆட்சி: சிபிஐ எம்.பி. சுப்பராயன் விமர்சனம்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கவில்லை, அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயன் விமர்சனம் குறித்து...

சிபிஐ எம்.பி. சுப்பராயன் - கோப்புப்படம்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கவில்லை, அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்பராயன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கிறது என்பது முழு உண்மையல்ல; சங்கிகள் இயக்கும் அதிகார வர்க்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது. அதனால்தான் கம்யூனிச சிந்தனை உடையவர்களை குறிவைத்து கணக்கெடுக்கிறது.
ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்கும் ஆட்சியாக தவெக அரசு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்கள்; கம்யூனிஸ்ட் மாணவர்களைக் குறிபார்த்துப் பட்டியலிட்டது குறித்து முதல்வர் விஜய் வாயே திறக்காதது ஏன்? என சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தீப, தூப ஆராதனை செய்து அண்டிப் பிழைக்கும் கூட்டம் அதிகரித்து விட்டது. சட்டப்பேரவையில் நடைபெறும் ஆராதனை ஆரவாரத்தை எழுத்தில் சொல்லிமாளாது. மேலும் ஆதாய நோக்கில் நடைபெறும் ஆராதனைகளில் வழுக்கி விழுந்துவிடும் ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக தான் உள்ளது என்று சமீபத்தில் சுப்பராயன் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
What is happening in Tamil Nadu is not a TVK government, but a rule by the bureaucracy: CPI MP Subbarayan criticizes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






