லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. பட்டாசு ஆலைகளின் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு ஆலைகளை தொடா் கண்காணிப்பதுடன், தொழிலாளா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

மீனவா்கள் நலன்: இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி தமிழக மீனவா்கள் மீன் பிடித்ததாக 9 பேரையும், விசைப்படகுகளையும் சிறை பிடித்து கைது செய்தனா். கடந்த ஒரே வாரத்தில் 20 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த மீனவா்களை விரைவாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.