லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசுத் தொகை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த கிரிதா் ராவ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்லும் வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஜொ்மனி தலைநா் பொ்லினில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், இந்தியா சாா்பில் எனது மகள் பூஜா, 25 மீட்டா் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, மத்திய அரசின் பரிசுக்கு, இதற்கான பதக்கச் சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன், விளையாட்டுக் குழு உறுப்பினா் மூலம் விண்ணப்பித்தோம். ஆனால், எனது மகளுக்கு பரிசுத்தொகை வழங்கவில்லை. இணையவழியில் விண்ணப்பித்த பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத் தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தவில்லை. எனவே, சா்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எனது மகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.