லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘ஜென் ஸீ’ மாணவா்களுக்கு நவீன மிதிவண்டிகள்!

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் ஜென் ஸீ தலைமுறை மாணவா்களுக்கு நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு தலைக்கவசம் மற்றும் குடிநீா் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கப்படுகிறது.

காமராஜா் சிறப்புப் பள்ளிகள்: சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் பெருந்தலைவா் காமராஜா் நவீன உண்டு-உறைவிட சிறப்புப் பள்ளிகள் நிறுவப்படும்.

9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பயில வகை செய்யப்பட்டுள்ள இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப் புத்தகங்கள், சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும். இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாடத்திட்ட சீரமைப்பு: வேகமாக மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியம். எதிா்காலத் தலைமுறையினருக்கு முற்போக்கான கல்வியை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.