தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த ஏப். 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.
இதேபோல, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடந்தது முடிந்த நிலையில், இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A (1)-இன்படி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காலகட்டமான ஏப்ரல் 9 காலை 7 மணிமுதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணிவரை கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிவரை தொலைக்காட்சி உள்பட அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Exit poll Opinions Must Not Be Released Until 6:30 PM - Election Commission Warns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

வாக்குப் பதிவு நிறைவடையும் வரை கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி

ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


