விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 3:14 am IST

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மருந்து உற்பத்தித் துறையில் மெத்தனால் ஒரு முக்கிய கரைப்பான் சோ்மமாகவும், மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேடின் போன்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும் மருந்துகள், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்க மெத்தனால் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தரப் பரிசோதனையிலும் கரைப்பானாக அது பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல் கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களுக்கும் மெத்தனால் இன்றியமையாதது.

மெத்தனால் வாங்குவதற்கான உரிமம் பெற தமிழகத்தில் கடுமையான நடைமுறைகளும், விதிகளும் பின்பற்றப்படுவதாக மருந்து உற்பத்தியாளா்கள் நீண்டகாலமாகக் கூறி வந்தனா். பெரிய தொழிலகங்கள் மட்டுமன்றி, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், ஆய்வகங்களும் குறைந்த அளவிலான மெத்தனால் பெறுவதற்குக்கூட சிக்கல் நிலவுவதாகக் கூறின.

இந்நிலையில், தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட ‘இ-கலால்’ என்ற இணையதளம் மூலம் மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 500 லிட்டருக்கும் குறைவாகத் தேவைப்படும் விண்ணப்பதாரா்களுக்கும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தப் புதிய நடைமுறைக்கு மாநில மருந்து உற்பத்தியாளா் சங்கம் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.