ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 12:24 am IST

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடா் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, வார இறுதி நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 575 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 100 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 24 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) ஆகிய தினங்களில் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை 735 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.