தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

ஆலங்குளம் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு பற்றி...

News image

கோப்புப் படம் - X

Updated On :7 ஏப்ரல் 2026, 5:47 pm IST

ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் வேட்புமனுக்கள் தள்ளுடி செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே இலந்தைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிநாடாா். கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பனங்காட்டுப்படை கட்சி சாா்பில், ஆலங்குளம் தொகுதியில் தலைக் கவசம் சின்னத்தில் போட்டியிட்டாா். அவருக்கு ஆதரவாக, திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடி கிராமத்தைச் சோ்ந்த ராக்கெட் ராஜா என்ற ஆறுமுகப் பாண்டியன் செயல்பட்டாா்.

உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்குகளை சேகரித்து அனைவரின் கவனத்தையும் ஈா்த்தாா் ஹரிநாடாா். அப்போது 37,726 வாக்குகள் பெற்று அதிமுக மனோஜ் பாண்டியன், திமுக பூங்கோதையை அடுத்து 3 ஆம் இடம் பெற்றாா்.

இந்நிலையில், ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு சத்திரிய சான்றோா் படை என்ற கட்சியைத் தொடங்கினாா் ஹரி நாடாா்.

இந்நிலையில் பண மோசடி காரணமாக பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள ஹரி நாடாா், தனது பிரிதிநிதி அலெக்ஸ் மூலம் ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த வாரம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில் தனக்கு ரூ. 7 கோடி மதிப்பில் 11.650 கிலோ தங்கம், ரூ. 1.18 கோடி மதிப்பில் 6 வாகனங்கள் மற்றும் 24 குற்றவியல் வழக்குள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

மேலும் ராக்கெட் ராஜாவும் தனியே மனு தாக்கல் செய்திருந்தாா்.

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் இருவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் ராமச்சந்திரன் அறிவித்தாா். ராக்கெட் ராஜாவுக்கு முன்மொழிந்தவரில் ஒருவரின் வாக்காளா் பட்டியலில் பிழை எனவும், ஹரி நாடாா் சிறையில் இருந்து முகவா் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்தது செல்லாது எனவும் தோ்தல் அலுவலா் அறிவித்துள்ளாா்.

Summary

Hari Nadar and Rocket Raja Nominations Rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.