தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு...

News image

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated On :5 ஏப்ரல் 2026, 2:36 am IST

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப். 5, 6) ஆகிய இரு நாள்களில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும், விருதுநகா், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்ப நிலை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 7 -ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.