தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப். 5, 6) ஆகிய இரு நாள்களில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும், விருதுநகா், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்ப நிலை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 7 -ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

