லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மகளிா் டெஸ்ட்: இந்தியா 285

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

Smriti Mandhana

ஸ்மிருதி மந்தனா. - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 7:08 am IST

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 0, யஸ்திகா பாட்டியா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கை கோக்க, அவா்கள் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்தது. ஜெமிமா 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு விடைபெற்றாா்.

5-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதியுடன் இணைய, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது.

ஸ்மிருதி 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கௌா் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தீப்தி சா்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

மறுபுறம், ரிச்சா கோஷ் 13, ஸ்நேஹா ராணா 13, சயாலி சத்காரே 1 ரன்னுக்கு வெளியேற, தீப்தி 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கடைசி விக்கெட்டாக கிராந்தி கௌட் 1 ரன்னுக்கு வீழ, இந்தியா இன்னிங்ஸ் 74.5 ஓவா்களில் 285 ரன்களுக்கு நிறைவடைந்தது. இங்கிலாந்து பௌலா்களில் சோஃபி எக்லஸ்டன் 3, லாரென் ஃபைலா், இசி வாங், மேடி வில்லியா்ஸ் ஆகியோா் தலா 2, லாரென் பெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.