லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரக்ஞானந்தா இணை முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் அவருக்கு இது 3-ஆவது வெற்றியாகும்.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவையும், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டையும் வென்றனா்.

அமெரிக்காவின் சாம் சேவியன் - சக நாட்டவரான வெஸ்லி சோ, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

8 சுற்றுகள் முடிவில், வெஸ்லி சோ மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் இணை முன்னிலை வகிக்கின்றனா். கீமா், சிண்டாரோவ் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.

கரானா, மேக்ஸிம், ஆரோனியன், சேவியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா். அனிஷ் (3.5), ஃபாரீஸ்ட் (1.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.