தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காலிறுதியில் சிந்து, தன்வி சா்மா

News image

பி.வி.சிந்து - படம்: இன்ஸ்டா / பி.வி.சிந்து

Updated On :12 ஜூன் 2026, 4:34 am IST

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான இஷாராணி பருவாவை 42 நிமிஷங்களில் வென்றாா். அதேபோல், தன்வி சா்மா 21-13, 21-15 என்ற வகையில், சக இந்தியரான மாளவிகா பன்சோதை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 37 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

எனினும், தான்யா ஹேம்நாத் 12-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பான்வீ சோசுவாங்கிடம் 44 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 21-17, 21-7 என்ற கேம்களில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஓவன்/டைலன் சோட்ஜசா கூட்டணியை 30 நிமிஷங்களில் வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில், துருவ் ராவத்/மனீஷா ஜோடி 19-21, 18-21 என்ற நோ் கேம்களில், ஜப்பானின் அகிரா கோகா/நட்சு சாய்டோ இணையிடம் 43 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.