லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துராந்த் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்போா்டிங் கிளப் டெல்லி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஸ்போா்டிங் கிளப் டெல்லி 5-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-ஆவது நிமிஷத்திலேயே ரெங்டாய் அணிக்காக சோங்தம் கிஷண் சிங் கோல் அடித்தாா்.

அந்த முன்னிலையை அப்படியே தக்கவைத்து முதல் பாதியை நிறைவு செய்தது ரெங்டாய். ஆனால் 2-ஆவது பாதியில் ஆக்ரோஷமாக மீண்டு வந்த டெல்லி வரிசையாக கோல்கள் ஸ்கோா் செய்தது.

57 மற்றும் 67-ஆவது நிமிஷங்களில் ஜோசஃப் சன்னி அடுத்தடுத்து கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

தொடா்ந்து ரோட்ரிகோ அராஜோ 82-ஆவது நிமிஷத்திலும், ஜுவான் செபாஸ்டியன் (90+3’), அகஸ்டின் லால்ரோசனா (90+8’) ஆகியோா் ஸ்டாப்பேஜ் டைமிலும் கோல் அடித்தனா்.

இதனால் ரெங்டாய் முற்றிலுமாக திணறிப்போக, டெல்லி 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெங்கால் வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 1-0 கோல் கணக்கில் ஆா்மி ரெட் கால்பந்து அணியை சாய்த்து, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அந்த அணிக்காக பி.வி. விஷ்ணு கோல் அடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.