ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்

களை மட்டும் பகிர்ந்து கதாசிரியர்களின் நினைவுகளை நம்முள் நிறுத்தும் பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு. மேலும், அந்த ஜாம்பவான்கள் குறித்த புகைப்படங்கள் நல்லதொரு ஆவணம்.

News image
Updated On :30 மார்ச் 2026, 6:56 pm IST

கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்-கலைமாமணி பி.ஆர். துரை; பக். 352; ரூ. 450; அன்னை புத்தகாலயம், சென்னை-600 017, ✆ 94441 26523.

'சரஸ்வதி கடாட்சம் கிடைத்தால் லட்சுமி கடாட்சமும் சீக்கிரமே கிடைக்கும்' என்கிற ஏழிசை வேந்தர் தியாகராஜ பாகவதரின் வார்த்தையை தனது இல்லத்தில் கேட்டிருக்கிறார் நூலாசிரியர். அந்தக் கலைமகளின் அருள்பெற்ற கதாசிரியர்கள் குறித்த அரிய குறிப்புகள் கொண்ட தொகுப்புதான் இந்நூல்.

நாடகத் துறையின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை உள்ள 73 ஜாம்பவான்கள் குறித்த தனது 70 ஆண்டு கால நினைவுகளை, தான் சந்தித்துப் பழகிய நிகழ்வுகளை அவர்கள் குறித்த பெருமைகளை சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.

சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், எஸ்.டி. சுந்தரம், கலைவாணர் என பட்டியலில் எல்லோருடைய பெயரையும் வாசிக்கும்போது, அவர்கள் பரிணமித்த பாத்திரங்கள் நம் நினைவுக்கு வருகின்றன.

நாடக வசனம் எழுதுவது எளிதானதல்ல. பார்வையாளர்களை எந்தவித கவனச் சிதறலுக்கும் உள்ளாக்காமல், தனது எழுத்தின் வலிமையால் அவர்களை இருந்த இடத்தில் அப்படியே அமர வைத்ததை நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

நாடக அரங்கங்கள், விருதுகள், நாடகங்களின் பெயர்கள் என தரவுகளை எல்லாம் பார்க்கும்போது நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது இந்தத் தொகுப்பு. கூடுதல் தகவல்களைத் தந்து திகட்ட வைக்காமல், தேவையான தரவு

களை மட்டும் பகிர்ந்து கதாசிரியர்களின் நினைவுகளை நம்முள் நிறுத்தும் பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு. மேலும், அந்த ஜாம்பவான்கள் குறித்த புகைப்படங்கள் நல்லதொரு ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.