லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லி அரசுப் பள்ளிகளின் 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய முதல்வா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கிழக்கு வினோத் நகா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கிழக்கு வினோத் நகா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ரேகா குப்தா பேசியதாவது: தில்லி அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ’வித்யா வாஹினி’ மிதிவண்டிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கண்ணியத்தின் ஊடகமாக மாறும், மேலும் அவா்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் செல்ல உதவும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் முதல் கட்டத்தில், 3,000 மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்டன.

அடுத்த மாதத்தில் படிப்படியாக தில்லி முழுவதும் பள்ளி மாணவா்களுக்கு மொத்தம் 1.40 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படும். பள்ளிக்குச் செல்வதை எளிதாக்குவது, வழக்கமான வருகையை ஊக்குவிப்பது மற்றும் பெண்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையுடன் இருக்க உதவுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ரேகா குப்தாவுடன் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் மற்றும் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.