ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இருதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை - ஸ்டான்லி மருத்துவனை சாதனை

பிறவியிலேயே இருதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை

Updated On :20 ஏப்ரல் 2017, 5:34 pm IST

பிறவியிலேயே இருதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இருதய பாதிப்புகளில் முக்கியமானது இருதய சுவரில் துளை காணப்படுவது ஆகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் இருதயவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது: இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சுப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையின்றி இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இருதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும். 

வாழ்நாள் முழுவதற்கும் இந்த சாதனைத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.  இந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகளுககு ஏப்ரல் 10-ஆம் தேதி செய்யப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இரண்டவரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும் என்றனர்.

 தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.