ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புற்றுநோயாளிகளுக்கு தலை முடி தானம் தரும் நிகழ்ச்சி

புற்றுநோயாளிகள் பயன்பாட்டுக்கு தலைமுடியை தானம் வழங்கும் விழா சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள

News image
Updated On :4 மார்ச் 2015, 6:14 pm IST

புற்றுநோயாளிகள் பயன்பாட்டுக்கு தலைமுடியை தானம் வழங்கும் விழா சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பிளஸ்ஸிங்ஸ் பள்ளியில் சனிக்கிழமை மார்ச் 7ம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் சோபியா ரேச்சர் மேரி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

புற்றுநோயாளிகள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போது அவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு செயற்கை முடியை தயாரித்து வழங்குவதற்காக முடிதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முடியை தானம் செய்ய விரும்புவர்கள் இதில் கலந்து கொண்டு தானமளிக்கலாம். பள்ளியின் மூலம் மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் ஆகியோருக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பேர் இதில் தங்கள் தலைமுடியை தானமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து க்ரீன் டிரென்ட்ஸ் சலூனின் உதவியுடன் தலைமுடி சேகரிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தானத்தை அளிக்கலாம். பள்ளி மாணவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.