தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கோடைக்கேற்ற கொடை

வந்து சென்ற கோடையிலே சென்று வந்தோம் கொடைக்கானலே!

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:03 am IST

வந்து சென்ற கோடையிலே

சென்று வந்தோம் கொடைக்கானலே!

வளைந்து ஏறிய பாதையிலே

வண்டிகள் பலவும் வந்தனவே!

-

உயர உயரப் போகையிலே

அழகாய்ச் சூழ்ந்தன மேகங்களே!

மலையில் மலர்ந்த மலர்களும்

மனது மயங்க மணத்ததுவே!

-

பக்கம் இரண்டிலும் பசுமையாய்

பலவகை மரங்களின் அடர்த்தியே!

குளிர்ந்த கருமை மேகங்களால்

குளிர்ச்சி எங்கும் நிறைந்ததுவே!

-

குதித்துத் தாவிடும் குரங்குகளும்

குறும்புகள் செய்திடக் கண்டோமே!

உச்சி நெருங்கிடும் உயரத்திலே

உள்ளம் மயக்கும் காட்சிகளே!

-

வளைந்து படுத்த பாம்பெனவே

வந்த பாதையும் தெரிந்ததுவே!

தரையில் தெரிந்த எல்லாமே

தெரிந்தன சிறிய பொம்மைகளாய்!

-

உள்ளமும் உடலும் மகிழ்ந்திடவே

உல்லாச மலையாம் கொடைக்கானலே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.