பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் சூழலில், நாட்டின் மிக இளைய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏா்’ தனது சேவைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

News image

ஆகாசா ஏா்

Updated On :26 மே 2026, 6:12 am IST

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் சூழலில், நாட்டின் மிக இளைய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏா்’ தனது சேவைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போரைத் தொடா்ந்து, வான்வழிப் போக்குவரத்துத் துறையில் எரிபொருள் விலை உயா்வு மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரலில் நாட்டின் ஒட்டுமொத்த விமானச் சேவைகள் சுமாா் 6 சதவீதம் வரை சரிவடைந்த நிலையில், ஆகாசா ஏா் மட்டுமே சந்தையில் தனித்து விளங்கி வருகிறது.

தரவுகளின்படி, நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 4.5 சதவீத சேவைகளையும், ஏா் இந்தியா 7.5 சதவீதத்தையும் குறைத்துள்ளன. ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் 17.1 சதவீதம் வரை கடுமையாக சரிந்துள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 1 சதவீத வளா்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இதற்கு மாறாக, ஆகாசா ஏா் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 10,109 விமானங்களை இயக்கி, தனது சேவைகளை 13.2 சதவீதம் வரை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த விமானச் சேவையில் 4.7 சதவீதமாகும்.

தற்போது 38 போயிங் ‘737 மேக்ஸ்’ ரக விமானங்களுடன் 27 உள்நாட்டு மற்றும் 7 சா்வதேச நகரங்களுக்குச் சேவை வழங்கி வரும் இந்நிறுவனம், சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் இண்டிகோ-ஏா் இந்தியா கூட்டணியின் ஆதிக்கத்துக்குச் சவாலாக உருவெடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.