பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்ரிநாத் அருகே மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு!

பத்ரிநாத் அருகே மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

News image

பத்ரிநாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவு - Video grab

Updated On :24 மே 2026, 10:21 pm IST

பத்ரிநாத் அருகேயுள்ள குபேர் பர்வதப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பனிச்சரிவு அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் புனித யாத்திரையான சார் தாம் யாத்திரை பாதிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பனிச்சரிவு காரணமாக அதிகம் பாதிக்கப்படும் பகுதியான கஞ்சன்கங்கா நாலா பகுதியில், இன்று காலை சுமார் 10 மணியளவில் இந்தப் பனிச்சரிவு நிகழந்தது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், பெரிய பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்து மேகக்கூட்டம் போல பனிப்புகை மேலேறும் காட்சி வெளியாகியுள்ளது.

பனிச்சரிவு பள்ளத்தாக்கின் உள்ளேயே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் இவ்வாறு பனிச்சரிவு ஏற்படுவதாக அங்குள்ளோர் கூறுகின்றனர். வெப்பம் அதிகரிக்கையில் பனிப்பாறைகளின் மேல் அடுக்குகளில் அவை வலிமையிழந்து பிளவு ஏற்பட்டு அவை சரிய காரணமாகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதியை அரசு நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சார் தாம் யாத்திரை சீராக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 31,965 யாத்திரீகர்கள் பத்ரிநாத்தில் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Massive Avalanche Near Badrinath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.