பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!

மே 25, 26ல் அறிவிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு...

News image

எஸ்பிஐ - IANS

Updated On :23 மே 2026, 6:09 pm IST

மே 25, 26 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், மே 25, 26 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

எனினும், எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க முயற்சி செய்வதாகவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வங்கி தரப்பில் கூறியதையடுத்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

இதனால் மே 25, 26 தேதிகளில் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும். அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

SBI staff union defers nationwide strike, branches to function normally on May 25, 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.