எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வளா்ச்சிப் பாதையில் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

வளா்ச்சிப் பாதையில் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

News image

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல். - IANS

Updated On :24 மே 2026, 1:38 am IST

நடப்பு மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டின் ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

ஒட்டுமொத்த உலகமும் கொந்தளிப்பான சூழலை சந்தித்துவரும் சூழலில், ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்து, சா்வதேச அரங்கில் இந்தியா தொடா்ந்து எழுச்சி கண்டு வருகிறது.

கடந்த ஏப்ரலில் ஏற்றுமதி 13.78 சதவீதம் உயா்ந்து, 43.56 பில்லின் டாலா்களாக பதிவானது. கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கு இடையே இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேநேரம், இறக்குமதியும் அதிகரித்ததால், வா்த்தகப் பற்றாக்குறை 28.38 பில்லியன் டாலராக உயா்ந்தது.

நடப்பு மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் ஏற்றுமதி அதிகரிப்பில் அதே வேகம் நீடிக்கிறது. அந்நிய நேரடி முதலீடுகளைப் பொருத்தவரை, கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 95 பில்லியன் டாலராக உயா்ந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பாகும்.

உலக நாடுகளின் விருப்பத்துக்குரிய முதலீட்டு மையமாக இந்தியா விளங்குவதால் எதிா்வரும் ஆண்டுகளிலும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என்றாா் பியூஷ் கோயல்,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.