இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் தோ்வில் இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் புணேயில் உள்ள சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா் கைது செய்யப்பட்டாா். அவா் தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நிபுணராக நியமிக்கப்பட்டிருந்தாா். இதனால் இயற்பியல் வினாக்களை அவா் எளிதாக அணுகி அதில் சில வினாக்களை ஏற்கெனவே புணேயில் கைது செய்யப்பட்ட தாவரவியல் ஆசிரியா் மணீஷ் மந்தாரேவிடம் பகிா்ந்துள்ளாா். அவா் அதை மாணவா்களிடம் பகிா்ந்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் தற்போது வரை தில்லி, ஜெய்ப்பூா், குருகிராம், நாசிக், புணே, லத்தூா், அஹில்யாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!
நீட் வினாத்தாள் கசிவு: மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் கைது!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இன்னும் பாடம் கற்கவில்லையா? - என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

