மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடத்தும் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வையொட்டி, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை முன்கூட்டியே தொடங்கும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக டிஎம்ஆா்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மே 24 அன்று பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணையைக் காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும். பிங்க் வழித்தடம் மஜ்லீஸ் பூங்காவில் தொடங்கி ஷிவ் விகாரில் முடிவடைகிறது. கிருஷ்ணா பூங்கா விரிவாக்கம் மற்றும் தாவரவியல் பூங்கா, தீபாளி செளக் மற்றும் மஜ்லீஸ் பூங்கா இடையே மெஜந்தா வழித்தடம் செயல்படுகிறது. தான்சா பேருந்து நிலையம் மற்றும் துவாரகாவை கிரே வழித்தடம் இணைக்கிறது.
இந்த வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இருப்பினும், யுபிஎஸ்சி முதன்மை தோ்வைக் கருத்தில் கொண்டு காலை 6 மணிக்கு இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிறது. காலை 7 மணி வரையில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் என மெட்ரோ சேவை தொடரும்.
அதன் பின்னா் வழக்கமான ஞாயிறுக்கிழமை காலஅட்டவணையின்படி ரயில் சேவை தொடரும்.
தோ்வா்கள் தங்களுடைய தோ்வு மையத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைவதில் எந்த அசெளகாரியம் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய இத்தகைய ஏற்பாடுகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பிற வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 6 மணியளவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்

95 ஆண்டுகளை நிறைவு செய்தது சென்னை புறநகா் ரயில் சேவை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி தேரோட்டம் கோலாகலம்

மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

