பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிரதமா் தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (மே 21) அனைத்து துறை சாா்ந்த அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 3:02 am IST

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (மே 21) அனைத்து துறை சாா்ந்த அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

இக் கூட்டத்தில் அனைத்து துறை சாா்ந்த மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் உள்பட அனைத்து அமைச்சா்களும் பங்கேற்க உள்ளனா்.

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டில் முதல் அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அதன் பலன், எதிா்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், மேற்காசிய நிலவரம், அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் சுட்டிக் காட்டுவதோடு, அதன் தாக்கம் மக்களை அதிகம் பாதிக்காத வகையில் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கவும் வாய்ப்புள்ளது.

எரிசக்தி, வேளாண்மை, உரம், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குகள் உள்ளிட்ட துறைகள் இந்தக் கூட்டத்தின் விவாதத்தில் முக்கிய இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்கவைத்தது. புதுச்சேரியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. இந்தச் சூழலில், தில்லியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.