கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உதவியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

சத்தீஸ்கா் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :20 மே 2026, 2:18 am IST

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உதவியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநிலம் பஸ்தா் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூா் பகுதியில், அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

‘நக்ஸல் இல்லாத இந்தியா’ திட்டத்தில் மூன்று தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதில் முதலாவது கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி. அன்றைய தினம் சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்று, நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க உறுதியான திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் பின்னா் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, நக்ஸல்களை ஒழிப்பது தொடா்பாக அனைத்து மாநிலங்களின் காவல் துறை தலைவா்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 31-க்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்நிலையில் பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் உதவின. இதை கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சத்தீஸ்கரில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு உதவவில்லை.

வளா்ச்சி எட்டாத பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் செழித்தோங்கியதாக சில அறிவுஜீவிகள் தெரிவித்தனா். உண்மையில், அந்தப் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் இருந்ததால்தான் வளா்ச்சி ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. இலவச உணவு தானிய திட்டம், ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கான பலனை அடைய முடியவில்லை. எங்கும் வேலைவாய்ப்பை காண முடியவில்லை.

நக்ஸல் தீவிரவாதத்தின் பிடியில் இருந்த பகுதிகள், விரிவான வளா்ச்சிக்கான புதிய தொலைநோக்குப் பாா்வை வடிவம் பெறுவதைக் காணும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.