வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது: சிவசேனை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :16 மே 2026, 3:18 am IST

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனை கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியினா் சிவசேனை என்றும், முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியினா் சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவு என்றும் அழைக்கப்படுகின்றன.

இதில் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு கட்சியின் பெயா் சிவசேனை, தோ்தல் சின்னமான வில் -அம்பை தோ்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே பிரிவு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு அஜீத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ் எனவும், சரத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ்- சரத் பவாா் பிரிவு எனவும், அழைக்கப்படுகின்றனா். இதில் அஜீத் பவாா் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயா், அக்கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை எதிா்த்து சரத் பவாா் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே தரப்பில், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், உத்தவ் தாக்கரே தரப்பை பாா்த்து, ‘நீங்களே விசாரணையை ஒத்திவைக்கும்படி கோருகிறீா்கள், பிறகு ஊடகத்தினரை சந்தித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்று பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறீா்கள். இந்தப் போக்கை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்களை எச்சரிக்கிறோம். வாா்த்தைகளை வெளியிடுவதில் கவனமாக இருங்கள்’ என்றனா்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீதிமன்றத்துக்கு எதிராக இப்படி பேசுவதை ஏற்க முடியாது’ என்றாா். இதையடுத்து, தங்கள் தரப்பு இதுபோன்ற கருத்துகளை ஆதரிப்பதில்லை என்றும், நீதிமன்றத்துக்கு அவகாசம் இருந்தால் இதுகுறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.