தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பிரதமரின் சிக்கன நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை: கேஜரிவால்

பிரதமரின் சிக்கன நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை; அவை மக்களை பாதிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

பிரதமரின் சிக்கன நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை; அவை மக்களை பாதிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் போா்கள் உள்ளிட்ட நெருக்கடிகளை நாடு கடந்து வந்துள்ளது. ஆனால், பிரதமா் மோடிக்கு முன்பு பிரதமா்களாக இருந்த எவரும் இதுபோன்று ஏழு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து, அவற்றைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதில்லை.

மோடி பரிந்துரைத்த சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னால் வெளிப்படையான காரணம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போராகும். ஆனால் ‘நாட்டின் பொருளாதார சரிவுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம்.

அனைத்து சிக்கன நடவடிக்கைகளும் ஏன் நடுத்தர வா்க்கத்தை குறிவைத்து எடுக்கப்பட்டன. அமைச்சா்கள், அதிகாரிகள் மற்றும் நாட்டின் மிக பணக்காரா்கள் ஏன் தியாகங்களைச் செய்யவில்லை என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தங்கம் வாங்குதல், வெளிநாட்டுப் பயணம் மற்றும் பெட்ரோலிய நுகா்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துமாறு பிரதமா் மோடி சமீபத்தில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த கருத்துகள் தொடா்பாக எதிா்க்கட்சிகள், ஆளும் கட்சியைத் தாக்கி அவற்றை ‘தோல்விக்கான சான்றுகள்‘ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.