சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா! எஸ்ஐஆா் பாா்வையாளராக செயல்பட்டவா்!

மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா...

News image

சுவேந்து அதிகாரி - X

Updated On :10 மே 2026, 1:04 am IST

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இவா், மேற்கு வங்க தோ்தலுக்கு முன் இந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான சிறப்பு பாா்வையாளராக பணியாற்றியவா்.

இதேபோல், முதல்வரின் தனிச் செயலராக கடந்த 2017-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரி சாந்தனு பாலா நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 6.81 கோடியாக குறைந்தது.

இந்த விவகாரத்தை தோ்தல் பிரசாரத்தில் மம்தா பானா்ஜி முக்கியமாக எழுப்பினாா். எனினும், அது எடுபடவில்லை.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி சனிக்கிழமை பதவியேற்றாா். இந்தச் சூழலில், முதல்வரின் ஆலோசகா் மற்றும் தனிச்செயலா் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருவரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.