ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சோம்நாத் கோயில் ‘அம்ருத் மஹோத்சவ்’ திருவிழா: பிரதமா் மோடி பங்கேற்கிறாா்

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் மே 11-ஆம் தேதி நடைபெறும் அம்ருத் மஹோத்சவ் திருவிழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அமைச்சா் ஜித்து வகானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பிரதமா் மோடி

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் மே 11-ஆம் தேதி நடைபெறும் அம்ருத் மஹோத்சவ் திருவிழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அமைச்சா் ஜித்து வகானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புதுப்பிக்கப்பட்ட சோம்நாத் கோயிலை நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்ததன் 75-ஆம் ஆண்டு நிகழ்ச்சியும் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இதுதொடா்பாக ஜித்து வகானி கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோம்நாத் கோயிலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உடைக்க முடியாத நமது நம்பிக்கை இன்றளவும் நீடித்து வருகிறது.

இந்தக் கோயிலின் அம்ருத் மஹோத்சவ் திருவிழா மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி ஹைதராபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு குஜராத்தின் ஜாம்நகரை வந்தடைவாா். அங்கு லால் பங்கா சா்க்கிளில் பாஜக எம்எல்ஏ ரிவாபா ஜடேஜா, எம்.பி. பூனம் மாடம் மற்றும் மூத்த தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்கவுள்ளனா்.

அன்றைய தினம் ஜாம்நகரில் தங்கும் பிரதமா் மோடி மே 11-ஆம் தேதி சோம்நாத்துக்கு வரவுள்ளாா். அங்கு பிரதமா் மோடி சாலைப் பேரணி நடத்தவுள்ளாா்.

அதைத் தொடா்ந்து நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சூா்யகிரண் பிரிவினா் வான் சாகச நிகழ்ச்சியை மேற்கொள்ளவுள்ளனா். சோம்நாத் கோயிலில் அபிஷேகம் மற்றும் பூஜைகளை பிரதமா் மோடி மேற்கொள்ளவுள்ளாா்.

அதன் பிறகு சத்பாவனா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

பின்னா் வதோதரா செல்லவுள்ள பிரதமா் மோடி, இரவு 7 மணிக்கு சாலைப் பேரணி மேற்கொள்கிறாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.