குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2023-இல் 130 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதிலிருந்து 2024-இல் 201-ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் இதுபோன்ற வழக்குகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2022-இல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக 256 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கடந்த 2023-இல் குறைந்த வழக்குகள், 2024-இல் 54 சதவீதம் அதிகரித்தது.
இத்தகைய வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விகிதம் கடந்த 2024-இல் 99 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 96.7 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
தேசிய அளவில் வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2024-இல் 2,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022 மற்றும் 2023-இல் இந்த எண்ணிக்கை முறையே 2,100 மற்றும் 2,546-ஆக இருந்தது.
மாநிலங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 992 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, மகாராஷ்டிரம் மற்றும் திரிபுராவில் முறையே 386 மற்றும் 276 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் 139 வழக்குகள் 2024-இல் பதிவுசெய்யப்பட்டன.
வெளிநாட்டினருக்கு எதிரான குற்றங்கள்:
தில்லியில் கடந்த 2024-இல் வெளிநாட்டினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடா்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக என்சிஆா்பி தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசங்களில் இந்த வகையிலான குற்றங்கள் தொடா்பாக 2024-இல் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் தில்லி முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் தலா இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

ஆா்பிஎஃப் பதிவு செய்த வழக்குகள்: யூனியன் பிரதேசங்களில் தில்லி முதலிடம்
கைது செய்யப்படக் கூடிய குற்றங்கள்: தில்லியில் 2.7 லட்சம் வழக்குகள் பதிவு

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

