விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாா் வெற்றி

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றி

News image

ரேகா பத்ரா

Updated On :5 மே 2026, 2:04 am IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றாா்.

அதேபோல் சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் ரேகா பத்ராவும் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றால் பெண்களுக்கான அரசாக பாஜக இருக்கும் என்பதை வெளிப்படுத்த இந்த இரு வேட்பாளா்களும் அக்கட்சி சாா்பில் களமிறக்கப்பட்டனா்.

பானிஹட்டி பேரவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் தீா்தங்கா் கோஷை எதிா்த்து போட்டியிட்ட ரத்னா தேப்னாத் 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அவா் 87,977 வாக்குகளைப் பெற்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மகனான நிா்மல் கோஷ், கடந்த 2024, ஆகஸ்ட் 9-ஆம் தேதி மருத்துவ மாணவி பாலியல் கொலை செய்யப்பட்ட பின் அவரது உடலை அவசர கதியில் தகனம் செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அவா் தோல்வியடைந்துள்ளாா்.

சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜகான் ஷேக் பெண்களை துன்புறுத்திய விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. ஷாஜகான் ஷேக்குக்கு எதிராக தனது பெண் குழந்தையுடன் ரேகா பத்ரா பேரணி சென்றது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.

இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பசீா்ஹட் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட ரேகா பத்ரா தோல்வியடைந்தாா். எனினும் அவருக்கு தற்போது பேரவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வாய்ப்பளித்தது.

இத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் அனந்த சா்காரை எதிா்த்துப் போட்டியிட்ட அவா் 94,786 வாக்குகளைப் பெற்றாா். 5,421 வாக்குகள் வித்தியாசத்தில் ரேகா பத்ரா வெற்றிபெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.