மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்தது குறித்து...

News image

பதுங்கு குழி - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 10:34 am IST

மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்ததோடு, தெங்னௌபால் மாவட்டத்தில் 18 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

லிட்டன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மலை கிராமங்களான மோங்கோட் செபு, ஷோங்பெல், முல்லம், சிராராகோங் மற்றும் ரிங்கு ஆகிய பகுதிகளில் இருந்த இந்தப் பதுங்கு குழிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, புதன்கிழமை (ஏப்ரல் 29) அன்று நடைபெற்ற தேடுதல் பணியில், தெங்னௌபால் மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

மணிப்பூரில் நிலவி வரும் இன மோதல்களுக்கு மத்தியில், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் அமைதியை நிலைநிறுத்தவும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இதுபோன்ற தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ருல் மாவட்டத்தில் உள்ள டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

In Manipur, security forces destroyed 23 illegal bunkers belonging to terrorists in the Ukhrul district and seized 18 bombs in the Tengnoupal district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.