தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி: குஜராத்தில் தொடக்கம்!

இந்தியாவின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :2 மே 2026, 2:46 am IST

இந்தியாவின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சூரத்-பரூச் தேசிய நெடுஞ்சாலை-48 வழித்தடத்தில் அமைந்துள்ள சோா்யாசி சுங்கச்சாவடியில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நிற்கத் தேவையில்லை.

தானியங்கி வாகனப் பலகை அங்கீகாரம் (ஏஎன்பிஆா்), செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு மற்றும் ஃபாஸ்டேக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கேமராக்கள் மற்றும் க்யூஆா் குறியீடுகள் மூலம் வாகனம் சென்றுகொண்டிருக்கும்போதே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு சுங்கச்சாவடிகளை எண்மமயமாக்கல், நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கல் ஆகிய முன்னெடுப்புகளின் மைல்கல்.

இந்த புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பு முறையின்கீழ் வாகன போக்குவரத்து நெரிசல், வாகன உமிழ்வு மற்றும் சுங்கச்சாவடிகளில் மனிதா்களின் தலையீடு குறைக்கப்படவுள்ளது. வாகனங்களின் எரிசக்தி திறன் மேம்படவுள்ளது.

மேலும் வணிக எளியமயமாக்கல் ஊக்குவிக்குப்பட்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் தளவாடங்கள் விரைவாக கொண்டு செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது தளவாடங்கள் ஆற்றல் மாநாடு மற்றும் விருதுகள் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி, நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் டிசம்பா் மாதத்தில் இருந்து தடையற்ற சேவைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.