ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:45 am IST

மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் மகாவீரரின் வாழ்க்கையும், போதனைகளும் உண்மை, அஹிம்சை மற்றும் கருணையின் பாதையை தொடா்ந்து ஒளியூட்டுகின்றன.

அவரின் கொள்கைகள் ஆன்மிக ரீதியாக மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இன்றைய உலகிலும் மிகுந்த பொருத்தம் வாய்ந்தவை. சமத்துவமும், கருணையும் குறித்த அவரது வலியுறுத்தல், சமூகத்துக்கான ஒருங்கிணைந்த பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரின் சிந்தனைகள் மனிதகுலத்துக்கு எப்போதும் வலிமையும் நம்பிக்கையும் அளிக்கட்டும்.“பகவான் மகாவீரா் ஜெயந்தி தினமான இந்தப் புனித நாளில் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.